search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் சுரேஷ்குமார்"

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை கடைவீதியில் உள்ள வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், பழக்கடைகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதை தொடர்ந்து கலெக்டர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 8 பேருராட்சிகளில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீதும், விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலெக்டர் வழங்கினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமசுப்பு, உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நாகை தாசில்தார் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
    உம்பளச்சேரி ஊராட்சியில் அடப்பாற்றின் கடைமடை அணையில் நீர்வரத்தினை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.
    வாய்மேடு:

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கடைமடை அணைகளில் இருந்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து தலைஞாயிறு ஒன்றியம் கள்ளிமேடு ஊராட்சியில் பொதுப்பணித்துறை சார்பில் அடப்பாற்றின் குறுக்கே ஆசிய வங்கி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.9.6 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அணையின் கட்டுமான பணிகளையும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.10 கோடியில் கட்டப்பட்டு வரும் வண்டல்-அவரிக்காடு இணைப்பு பாலத்தின் கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்க, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி ஊராட்சியில் பொதுப்பணித்துறை சார்பில் அடப்பாற்றின் கடைமடை அணையில் நீர்வரத்தையும், பிரிஞ்சுமூலை பகுதியில் அரிச்சந்திரா நதியின் கடைமடை அணையில் நீர்வரத்தையும் அவர் பார்வையிட்டார்.

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கோடிவிநாயக நல்லூர் பகுதிக்கு சென்ற கலெக்டர் சுரேஷ்குமார், கடைமடை அணைகளில் இருந்து பாசனத்திற்காக தேவையான தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாகவும், தண்ணீரை முறையாக பாசனத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருவேட்டைச்செல்வம், இணை இயக்குனர் (வேளாண்மை) நாராயணசாமி, உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கண்ணப்பன், உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், சண்முகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    நாகை மண்டலத்தில் 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மண்டலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கே.எம்.எஸ் 2017 - 2018 குறுவை பருவத்திற்கு ஐந்தாம் கட்டமாக 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி சீர்காழி தாலுக்காவில் அரசூர், வைத்தீஸ்வரன் கோயில். மயிலாடுதுறை தாலுக்காவில் நமச்சிவாயபுரம், திருச்சிற்றம்பலம் மற்றும் குத்தாலம் தாலுக்காவில் நக்கம்பாடி, திருவாலங்காடு, அசிக்காடு ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 30-ந்தேதி முதல் திறக்கப்பட்டது.

    இந்த நிலையங்களில் சன்னரகம் நெல் கொள்முதல் விலை ரூ.1660-க்கும் சாதாரணரகம் (பொதுரகம்) நெல் கொள்முதல் விலை ரூ.1600- க்கும் விற்பனை செய்து விவசாயிகள் தங்களின் நெல்லுக்குரிய தொகையினை மின்னணு பண பரிவர்த்தனை முறையில் பெற்று பயனடையலாம். 

    இந்த தகவலை கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    நாகை மாவட்டத்தில் நீர் நிலைகளில் ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. வருகிற 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

    களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்குமாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.

    நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்குவிளைவிக்காத இயற்கை வர்ணங்களுடன் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது. மீறி கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகை மாவட்டத்தில் நாகை வெட்டாறு (நாகூர் பாலம் அருகில்) மற்றும் புதியகடற்கரை, மயிலாடுதுறையில் காவிரி ஆறு, தரங்கம்பாடி கடற்கரை, பூம்புகார் கடற்கரை ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி தமிழ்நாடு பொன்விழா தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    கீழ்வேளூர்:

    தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50ம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதன் பொன்விழா ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 21 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு எதிர்வரும் 19.7.18 அன்று காலை 9 மணி முதல் மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது என்று நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    தடகள விளையாட்டில் 100மீ. ஓட்டம், உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவிற்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் 31.12.17 அன்று 21 வயதிற்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். முதலிடத்தில் வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசுத் தொகையாக ரூ.2,500ம், 2ம் பரிசு ரூ.1,500ம், 3ம் பரிசு ரூ.1,000ம் வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். மாநில போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000-ம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 2ம் பரிசு ரூ.25,000ம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 3ம் பரிசு ரூ.10,000ம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம் முதலமைச்சரால் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர் ஆகிய ஒன்றியங்களில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செருதூர் - வேளாங்கண்ணி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வெள்ளையாற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட பாலத்தையும், தலைஞாயிறு ஒன்றியம் வண்டல் அவுரிக்காடு சாலையில் நல்லாறு, அடப்பாறு, முள்ளியாற்றில் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.11 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இணைப்பு பாலம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டார்.

    மேலும், பொதுப்பணித்துறை சார்பில் அரிச்சந்திரா நதியின் குறுக்கே பிரிஞ்சிமூலை இயக்கு அணையை ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவித்திட்டம் மூலம் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புணரமைத்து மறுகட்டுமானம் செய்யும் பணிகளையும், கள்ளிமேடு கிராமத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் வெண்ணாறு உபவடிநிலத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கடைமடை நீரொழுங்கி கட்டுமான பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்தும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்டப் பொறியாளர் சாலைகுகன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் கமலக்கண்ணன், பொதுப்பணித்துறை செயற்்பொறியாளர்கள் வேட்டைச்செல்வம், ஞானசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார்கள் சங்கர், தையல்நாயகி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந் தனர். 
    ×